Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, February 1, 2010

சித்தர் பூமி திண்டுக்கல்லில் பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்குஒரு ஆஸ்ரமம்....








திண்டுக்கல்
சித்தர்களும்,
ஞானிகளும் வாழும் பூமி.
இந்த திண்டுக்கல்லில் ஞானிகளும் வணங்கும்பெருமை பெற்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி

1890ம் ஆண்டு தனது 11ம் வயதில் 1வருடம்
இங்குள்ள
நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
படித்தது
திண்டுக்கல்லுக்கு பெருமை.

அந்த நாளில் மாலை வேளைகளில்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி
பத்மகிரி மலையைச் சுற்றி
ஆடிப்பாடி விளையாடி உள்ளார்.

திண்டுக்கல் கோவில் தெருவில்
அவருடைய உறவினர் வீட்டில் வசிக்கும் போதுஅடிக்கடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

சிலசமயங்களில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பஉறவினர்கள் நையப்புடைந்தும் உள்ளனர்.

ஊமைத்துரை சுரங்கப் பாதையில் நண்பர்களுடன்
விளையாண்ட அனுபவத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷி பின்னாளில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும்போது
திண்டுக்கல்லில் இருந்து வரும் அன்பர்களிடம் பகிர்ந்துகொள்வாராம்.

யூதர்கள்
உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளியாக
அறியப்படுபவர்கள் யூதர்கள்.
ஏன்,எதற்கு,எப்படி?என்று கேள்விகளால்
துளைக்கும்
யூதர்களே
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்
நான் யார்?தத்துவத்தில் மனம் அடங்கி
பகவானை கொண்டாடுகின்றனர்.

பகவான் பிறந்த இடம்
திருச்சுழி
பகவான் வாழ்ந்த இடம்
மதுரை
அடங்கிய இடம்
திருவண்ணாமலை
இந்த மூன்று இடங்களையும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்
வந்து பார்த்து தரிசித்து
தங்கி செல்லும்படிஆசிரமங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி
வாழ்ந்து
படித்து
விளையாடிய
சிறுமலை சூழ்ந்த திண்டுக்கல்லிலும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்வந்து பார்த்து தரிசித்து தங்கி செல்லும்படி
ஒரு ஆசிரமம் அமைக்கும் பணியைபகவான் அருளால் தொடங்கி உள்ளோம்.

2009ம் வருடம் பிப்ரவரி மாதம் 1ம் தேதிஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்குபகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளிய ஸ்ரீஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக அன்பர் இல்லத்தில்நடைபெற்றது.

அதன் பிறகு பிரதி வாரம் ஞாயிற்று கிழமைதோறும்
அன்பர்கள் இல்லத்திலும்
திருக்கோவில்களிலும்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளியஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக தொடர்ந்து பகவான்அருளால் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாத கார்த்திகை நாள் அன்றும்இல்லாத ஏழை எளியவர்களுக்குஅன்னதானம் பகவான் ஸ்ரீரமண மகரிஷிஅருளால் வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்நல்ல விசயங்களை போதிப்பதற்காகவும்ஸ்லோகங்களை கற்றுக்கொடுக்கவும் ஸ்ரீரமணாச்சல குருகுலத்தை பகவான்அருளால் நடத்தி வருகின்றோம்.

உலகமெங்கும் உள்ள
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்அடியார்களின்
அன்பும், ஒத்துழைப்பும் இருந்தால்
மிகச்சிறப்பாய்
திண்டுக்கல் ஸ்ரீரமணாச்சல ஆஸ்ரமம் அமையும் என்பது திண்ணம்.

அருணாச்சலம் வாழி, அன்பர்களும் வாழி
அட்சரமணமாலை வாழி.




Friday, July 25, 2008

திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது...ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும்


திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது
ஆனாலும் நாகல் நகரில் அமைந்துள்ள
சுப்பையர் சத்திரம்
இன்னும் மாறாமல்
பழமையும் தொன்மையும்
ஒருங்கே அமையப்பெற்று
விளங்குகிறது

இந்த சுப்பையர் சத்திரத்திற்கு
ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.
நல்ல ஆன்மீக அதிர்வுகள்
உள்ள இடம்
இந்த சுப்பையர் சத்திரம்.

இந்த இடத்திற்குள் நுழைந்தாலே
நம்மையும் அறியாமல்
அமைதி நம் மனதிற்குள்
குடிகொள்ளும்.

பழமை வாய்ந்த பிள்ளையாரும்
பழங்கால பட்டிய கற்களால்
ஆன திண்ணைகளும்
ஏதோ கதை சொல்லும்
ஒங்கி வளர்ந்த ஆலமரமும்
அதன் தென்றல் காற்றும்
நம்மை தாலாட்டும்.

இந்த பழமையும் பெருமையும்

வாய்ந்த இந்த இடத்தில்தான்
ஆடி ஒன்றாம் தேதி முதல்
இராமாயணச் சொற்பொழிவு
நடைபெற்றது.

கேட்போர் அனைவரையும்
தன் விசய ஞானத்தாலும்
தெய்வீகத்தினாலும்
சுந்தர ராம தீட்சிதர் அவர்கள்
இராமாயண காலத்திற்கே
சென்ற அனுபவத்தை
கிடைக்கச்செய்தார்.

சில துளிகள் இங்கே.

சுமார் 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாம்.

லோகத்துல தசரதன் ராமர் மாதிரி அப்பா பிள்ளைய பாக்குறது ரொம்ப கஷ்டம்.ராமரைப் பார்க்காமல் தசரதனுக்கு தூக்கமே வராதாம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ராமரை தசரதன் அழைத்தாலும் முகம் வாடாமல் தந்தையை ராமன் வணங்கி மரியாதை செய்யும் அழகே தனிதான்.

இந்த காலத்தில் அப்பா ஒரு முறை கூப்பிட்டு இந்த விசயத்தை முடித்துவா என்று கூறினாலே சும்மா சொன்னதையே சொல்லாதீங்கப்பா என்று உதாசீனப்படுத்துபவர்கள் தான் அதிகம். பதவி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இளய மகனுக்கு பதவி கொடுக்கிறேன் என்றால் இந்த காலத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் ராமன் சித்தி கைகேயின் மூலமாக தம்பி பரதனுக்கு பட்டாபிசேகம் என்பதையும், தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டாலும் சிறிதுகூட முகவாட்டமில்லாமல் அன்னையே அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நிலையிலும் தன் தந்தை தசரதரின் உடல் நலக்குறைவே அவரை மிகவும் பாதித்தது.

தனக்கு பட்டாபிசேகம் என்ற விசயத்தை பரதன் கேள்வி பட்டாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,மறுக்கிறார். இது முறையன்று என்று ராமனிடம் மன்றாடுகிறார். ஆனாலும் ராமர், பரதா... தந்தைக்குச்செய்யும் கடமையிலிருந்து தவறாதே என்று தந்தையை மட்டும் நினைத்து கவலைப்படுகிறார்.

என்னே அழகு அந்த காலங்கள், இன்றைக்கு அண்ணன் தம்பிகளிடம் இந்த நிலையைகாணமுடியுமா? அப்பா அண்ணனுக்கு மட்டும் என் 73 செல்லு, எனக்கு 1100வா? இது மட்டுமா... அவனுக்கு அண்ணாநகர்ல பிளாட் எனக்கு அரக்கோணத்திலேயா?உன் வயசுக்கு இப்படி ஒரவஞ்சன பன்னலாமா? என்று தந்தையிடம் கேட்டால் இந்த காலத்தில் அதற்கு பெயர் மரியாதை.

ராமனைத் தேடி பரதன் காட்டிற்கு வந்து எவ்வளவோ அழைத்தும் ராமர் தன் முடிவில்இருந்து மாறவில்லை. முடிவில் பரதன் அண்ணா உன் பாதுகையாவது கொடு என்று ராமரின் பாதுகையை வாங்கி தலை மேல் வைத்துக்கொண்டு நாட்டிற்கு சென்றான்.

ஆயிரம் ராமனுக்குச் சமம் பரதன் என்று வால்மீகி வர்ணிக்கிறார் ஏன்?விட்டுக்கொடுக்கும் குணமும் தர்மம் அறியும் குணமும் முறையே ராமர், பரதனிடம் இருந்துள்ளது.தன் அன்னை கைகேயின் சூழ்ச்சியால் அண்ணன் காட்டிற்குச்செல்கிறார், அதை ராமரும் ஏற்றுக்கொண்டு தம்பிக்கு முடிசூட்ட விட்டுகொடுக்கிறார்.ஆனால் பரதனோ கிடைத்தவரை லாபம் என்று எண்ணவில்லை,அண்ணா இது தர்மம் அல்ல மூத்தவர் நீங்கள்தான் அரசாள வேண்டுமென்று போராடுகிறார். இந்த குணத்திற்காகத்தான் வால்மீகி அவ்வாறு கூறினார்.

இன்னும் ஒரு விசயம்

ஆஞ்சநேயரை ராமர் என்று பார்த்தாரோ அன்றே அவரின் கஷ்டமெல்லாம் கதிரவனைக்கண்ட பனி போல் விலகிவிட்டது.அதனால் தான் நாம் ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த நாளை தொடங்கும் போதும் அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டும்,ஆஞ்சநேயரை மனதில் இருத்திக்கொண்டும் வேலையை தொடங்கினால் ஜெயம் உண்டாகும்.

கூட்டத்தில் உள்ளவர்கள் தன்னை மறந்து சுந்தர்ராமதீட்சதரின் மென்மையான காந்த குரலில் ராமாயணத்தை சுப்பையர் சத்திரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

பல ஆன்மீக பெரியவர்களால் பலமுறை ராமாயணச்சொற்பொழிவை கேட்டிருந்தாலும்சுந்தராம தீட்சதரின் கதை சொல்லும் பாணி அனைத்து தரப்பினரையும் கட்டிபோட்டிருந்தது.

கதைகளின் இடையே கிளைக்கதைகளும், கதைக்கு சம்பந்தமான தற்கால நடைமுறைகளையும் அழகுறச்சொல்லி கேட்பவர் மனங்களை சிந்திக்கச் செய்கிறார்.

எந்த நாட்டிற்கும் வந்து சொற்பொழிவை அழகுற நடத்தி கேட்பவர் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இராமாயணம் சொல்ல சுந்தர்ராம தீட்சதரை அனுகலாம்.
அவரின் அலை பேசி எண்: 9444230084.

Tuesday, September 18, 2007

எது ஆன்மீகம்..?


முருகா... ஞானபண்டிதா...

என்னோட சின்ன ஆசையை நிறைவேத்துப்பா.

இருக்குறதற்கு 2400 சதுர அடியில ஒரு ப்ளாட், அதுல சின்னதா 1000 சதுர அடியில ஒரு வீடு. அப்புறம் அங்க, இங்கே போறதுக்கு சின்னதா ஒரு மாருதி Zen ன் கார் போதும்பா.

என்ன உலகமெல்லாம் தொடர்பு கொள்ள என் 72 மாடல் செல்போனும், சோனி லேப்டாப்பும் வேணும்னு உனக்கே தெரியும். எல்.என்.டி கம்பெனி Share-ர்ல ஒரு 2000ம், மியுச்சுவல் பண்டுல ஒரு 4 லட்சமும் போதும்.

சிட்டிக்கு நடுவில் மாசம் ஒரு லட்சம் வாடகை வர்ற மாதிரி இருந்தாத்தானே சொந்தக்காரங்க மதிக்கிற மாதிரி இருக்கும்.

அப்புறம் பொண்ணுக்கு நல்ல அமெரிக்க மாப்பிள்ளையும், பையனுக்கு உலகம் முழுவதும் சுற்றி வந்து சம்பளம் வாங்கற மாதிரி ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில வேலை கிடைச்சா போதும்பா....

நம்மில் பலர் ஆன்மீகம் என்ற போர்வையில் நம் பேராசைளை கடவுள் முன் வைக்கிறோம். நம் மனசாட்சியை தொட்டு உண்மையாக கேட்டால், நமக்கே தெரியும் நாம் உண்மையாய் இல்லை என்று.

நம்மில் முழ்கி மனமுருக அனைவரின் நலத்திற்காக வேண்டுவதையே இறைவனும் விரும்புவார். இல்லாதவற்கு இரங்குவோம்.

நம் கண்ணுக்கு தெரிந்து உண்மையிலேயே கஷ்டப்படும் சகோதர, சகோதரிகளின் படிப்பிற்கு உதவுவோம். தான் தன் குடும்பம் என்பதோடு சிறிதளவேனும் பிறருக்கும் உதவுவோம் மனிதநேயத்தை உயிர்த்தெழ செய்வோம்.

ஆன்மீகம் என்பது வேண்டுவதல்ல, கொடுப்பது.

அன்புடன்

பிஎல்.முத்தையா