Showing posts with label சந்தோஷங்கள். Show all posts
Showing posts with label சந்தோஷங்கள். Show all posts

Monday, July 7, 2008

சின்ன சின்ன சந்தோஷங்கள்


கூகுல் சர்ச்சில் ராஜா சொக்கலிங்கம் பிளாக்கர்ஸ் என்று போட்டதில் 'ஹலோ சவுக்கியமா' என்று ஒரு டைட்டில் கிடைத்தது. ஆர்வமுடன் அதை சொடுக்கியதில் கெளரி சங்கர் என்ற எதார்த்த இளஞனின் வலைப்பதிவு படிக்க நேர்ந்தது. மிகச் சிறப்பாக எண்ணங்களை வெகு அழகாக எளிய நடையில் பதித்திருந்தார் அந்த இளஞர்.அலட்டல் இல்லாமல் அட்டகாசமாய் எழுதும் கெளரி சங்கரின் கலைத்திறமை வளர வாழ்த்துகிறேன்.

சும்மா இருக்க முடியாமல் என் பாட்டியின் பேச்சை எப்பொழுதோ செல்லில் பதிவு செய்து வைத்திருந்ததை என் பாட்டியின் மறைவுக்குப்பின் கேட்டபொழுது அவர்களின் குரல் என்னை என்னவோ செய்தது.என் பாட்டியின் பேச்சை என் சித்திபையன் சக்திக்கும், மாமாபையன் வள்ளியப்பனுக்கும் மெயிலில் அனுப்பிவைத்தேன். திடீரென்று ஒரு நாள் ஆர்குட்டில் அழைத்த போது ஸ்கிராப் ப்றம் சக்தி என்று வந்ததை கிளிக் செய்தேன். என் தம்பி சக்தியின் குறுஞ்செய்தி என் மனதெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தைப் பரப்பியது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில்தான் எவ்வளவு சந்தோசம்.19:03:08 புதன்கிழமை அன்று ஒரு கேஸ் விசயமாக நீதிமன்றத்தில் நின்றிருந்தேன். தொடர்ந்து என் அழைப்பேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. காரணம் அன்று ஜனசக்தி தினசரிப்பேப்பரில் நாங்கள் தயாரித்த "தி வேரியபிள்ஸ்" என்ற குறும்படத்தின் விமர்சனம் வந்திருந்ததுதான்.குறிப்பாக என்னுடைய மகிழ்ச்சிக்குகாரணம் அந்தப் படத்தை இயக்கிய கார்த்திகேய மணிகண்டனைப் பராட்டி எழுதியதுதான். மிகச்சைறப்பான இளஞர். உலகத் திரைப்படங்களை அவர் அலசும் விதமும்,ஸ்கிரிப்ட் எழுதும் நேர்த்தியும் வியக்கத்தக்கன. கண்டிப்பாய்த் திரையுலகில் நல்ல இயக்குனராய் முத்திரைப்பதிப்பார்.

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை எத்தனை இளஞர்கள் இந்த உலகத்தில் சாதிக்க காத்திருக்கிறார்களோ?