Saturday, August 2, 2008

குசேலன் ரஜினி நல்லவரா? கெட்டவரா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாகப்பா,இதுல ஒரு சீட்டெடு என்று கராத்தே மணியிடம் ரஜினி கேட்கஏங்கிட்டேயேவா என்று கராத்தே மணி கேட்க உன்னையத்தாண்டா என்று அழுத்தி சொல்லிவிட்டு,எல்லாருக்கும் நாள் குறிச்சீல உனக்கு நான் நாள் குறிக்கிறேன்டா என்றபடி ஸ்டைலாக நடந்து ஒரு உதை கொடுப்பார்.

"அன்புக்கு நான் அடிமை" அந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம் தெரியாதபிடிப்பு அவர் மேல் ஏற்பட்டது.
ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அன்புக்கு நான் அடிமை படத்தை ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு நான்கு முறை பார்த்தேன்,அதிலும் ரஜினி போடும் மான் கொம்பு சண்டையைமறக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தவுடன் ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.

ரஜினியை
ஒரு தயாரிப்பாளருக்கு பிடிக்கலாம்
ஏன்?
அதில் ஒரு நியாயம் உள்ளது.
ஏனென்றால் தன்னை நம்பி வரும் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே சம்பாதித்துகொடுப்பதால்.

ரஜினியை
ஒரு இயக்குனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் ரஜினியை இயக்கிதால் கிடைக்கும் பெருமையால்.

ரஜினியை
ஒரு விநியோகஸ்தருக்கு
ஒரு தியேட்டர் அதிபருக்கு
ஒரு தியேட்டரில் உள்ள கேண்டீன் ஒனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் இவர்களுக்கும் ரஜினியால் பெருமையும் லாபமும் கிடைப்பதால்.

பணத்தையும் கொடுத்துவிட்டு லாபமும் இல்லாமல் லட்சோப லட்சோபம் பேர், படித்தவர் முதல் பாமரர் வரை ரஜினியை விரும்புவதின் ரகசியம் என்ன?

காரணம்

நாம் நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாதுகுறைந்த பட்சம் நாம் நினைப்பதை உள்ளது உள்ளபடி பேசக்கூட தயக்கம்,பயம்.அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்லுவாரோ என்று சதாசர்வகாலமும் பிறரை நினைத்தே நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதே இல்லை.

நம் கண் எதிரே நடக்கும் சின்னச்சின்ன தவறுகளை தட்டிகேட்க வேண்டும் என்று மனது துடிக்கும் ஆனால் யதார்த்தம் நம்மால் முடியாது.

ஆனால்

ரஜினி திரையில் இதை எல்லாம் வெகு இலகுவாக சாதித்து காட்டுவார்.நியாயத்தை தட்டி கேட்டு அவர் விடும் பஞ்சு டைலாக்கும் அப்படியே மனதில் சென்று தங்கிவிடும்.
சராசரி மனிதனால் முடியாத எதையும் திரையில் ரஜினி சாதித்து காட்டுவதால்தான்பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கிறது.

ரஜினி
என் தைரியத்துக்கு ஒரு காரணம்
என் குரு ஸ்ரீரமண மகரிஷியைக் காட்டியவரும் அவரே
அவரின் எளிமை அனைவரையும் போல் எனக்கும் பிடிக்கும்.

"வாழ்கையில ஒன்னவிட ஒன்னு பெட்டராத்தான் தெரியும் ஆனா நமக்கு என்ன வேணும்னு நாமதான் உறுதியா தேர்ந்தெடுத்தா தான் நம்ம வாழ்கை நல்லா இருக்கும்."

ஜானி படத்தில் தீபாவிடம் ரஜினி கூறும் இந்த வசனம் மனதில் நச்சென்று பதிந்தது. உருவாக்கியவர் இயக்குனர் மகேந்திரனாக இருக்கலாம்,அது மனதில் பதிந்ததற்கு காரணம் ரஜினிதான்.வாழ்க்கைகு தேவையான நல்ல விசயங்கள் பல ரஜினி மூலமே எனக்கு கிடைத்தது.

சோர்வு வரும்போதெல்லாம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
எங்கிட்ட மோதாத நா ராஜாதி ராஜானடா
பொதுவாக எம்மனசு தங்கம்
மை நேம் ஸ் பில்லா
என் தாயின் மீது ஆனை எடுத்த சபதம் முடிப்பேன்

இந்தப் பாடல்களை கேட்க்கும் போது எங்கிருந்துதான் உற்சாகம் வருமோ?சோர்வுக்கே சோர்வு வந்துவிடும்.

நம்பிக்கை இழக்கும் போதெல்லாம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
சக்தி கொடு


இந்தப்பாடல்கள் காதில் விழுந்தாலே நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

எங்காவது பயணம் செய்யும்போதோ
இயற்கையுடன் ஒன்றியிருக்கும்போதோ

கண்மணியே காதல் என்பது கற்பனையோ.
பெண்மானே சங்கீதம் பாடிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது.
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்கோலம்
அடி வான்மதி என் காதலி
வெண்மேகம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும் வெள்ளைப் புறா ஒன்று
காத்தோடு பூ உரச
விழியிலே மலர்ந்தது
சகானா சாரல் தூவுதே

இந்தப் பாடல்களை கேட்டால் மனதை யாரோ மெல்லிய மயிலிரகால் வருடி விடுவதைப்போல் இருக்கும். நம்மேல் அன்பு கொண்டவர்களின் அருகில் இருக்கும் உணர்வை இப்பாடல்கள் எனக்கு தருகின்றன. என் மேல் அன்பு செலுத்துவதற்கு யாருமே இல்லை என்ற நிலை வந்தாலும் இப்பாடல்களே எனக்கு துணை என்று இருந்துவிடுவேன்.

கம்பங்கழி தின்னவனும் மன்னுக்குள்ள
தங்க பஷ்பம் தின்னவனும் இந்த மன்னுக்குள்ள

இந்த ரெண்டுவரிய கேட்டாலே வாழ்க்கையில நடக்கற கஷ்டமான விசயங்களஎளிதா எடுத்துக்க முடியும்.

ரஜினிய
அப்பமட்டுமில்ல
இப்பவும் பிடிக்குது
இப்பமட்டுமில்ல
எப்பவும் பிடிக்கும்
ஏன்னா?
அவரோட எளிமை
விடாமுயற்சிநம்பி
வந்தவர்களை கைவிடாத தன்மை
எதிரியையும் நேசிக்கும் பண்பு
அனைவரையும் மதித்து உற்சாகப்படுத்தும் தன்மை.

மொத்ததில் நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு வேண்டிய விசயங்கள்தான் இவை.

இது எளிதில் ரஜினிக்கு வசப்பட்டதால்தான், பெரும்பான்மையானவர்கள் ரஜினிக்கு வசப்பட்ட ரகசியம் இதனால் தானோ?

3 comments:

said...

நண்பா இந்த பாட்டை எல்லாம் ரஜினியா பாடினார்? நீங்க நன்றி சொல்லனும்னா பாடல் எழுதியவர் வாலி / வைரமுத்து அல்லது பாடியவர் பாலுக்கு சொல்லுங்க!!

said...

"வாழ்கையில ஒன்னவிட ஒன்னு பெட்டராத்தான் தெரியும் ஆனா நமக்கு என்ன வேணும்னு நாமதான் உறுதியா தேர்ந்தெடுத்தா தான் நம்ம வாழ்கை நல்லா இருக்கும்."

ஜானி படத்தில் தீபாவிடம் ரஜினி கூறும் இந்த வசனம் மனதில் நச்சென்று பதிந்தது. உருவாக்கியவர் இயக்குனர் மகேந்திரனாக இருக்கலாம்,அது மனதில் பதிந்ததற்கு காரணம் ரஜினிதான்.வாழ்க்கைகு தேவையான நல்ல விசயங்கள் பல ரஜினி மூலமே எனக்கு கிடைத்தது.

said...

Thank u nanba ,i love kaavingar Valli & Vairamuthu & the super singer S.P.B.