Tuesday, July 29, 2008

மனதிற்கு தெரிந்தபடி..



மனதிற்கு தெரிந்தபடி
எடுத்த புகைப்படங்களை
இங்கே
தொகுத்துள்ளேன்.

தொகுத்தவைகளை
பார்த்துவிட்டு
கருத்துக்களை
தெரிவித்தால்
மகிழ்ச்சியடைவேன்.

http://www.flickr.com/photos/sri_10/

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.

நா பணக்காரனா இருகறதால சைக்கிள் கிடைக்கல
என்னடா சொல்ற?
அரசு ஏழைக்குதானடா சைக்கிள் தருது...


எங்கப்பாவுக்கு நா மரியாத தரலேன்னு எங்க வீட்ல கோபப்பட்டதால மரியாத பண்ணேன் அதுக்கு கொல வெறியோட அடிக்க வர்றாங்கடா...
ரொம்ப அநியாயமா இருக்கே? மரியாத செஞ்சதுக்கேவா?
ஆமா நா அவர் படத்துக்கு மால போட்டு ஊதுபத்தி ஏத்தில்ல மரியாத செஞ்சேன்.????



ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.
எப்டி?
ஏன்னா எவன் வெற்றி பெற்றிருக்கான்னு தெரிஞ்சுகிட்டுதான கல்யானமே பண்றாங்க.

கல்யாணத்த நெனச்சாலே வெறுப்பா இருக்கு

கல்யாணத்த நெனச்சாலே வெறுப்பா இருக்கு
டேய் மாமு ரொம்பதான் அலட்டிக்கற
ஊர் சுத்துற வெட்டி ஆபீசருக்கு யார்டா பொண்ணு கொடுப்பா?

செல்வந்தரும் சந்நியாசியும்...


ஒரு மிகப்பெரிய செல்வந்தரும் ஒரு சந்நியாசியும் காரில் பயணமானார்கள்.செல்வந்தருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது சந்நியாசியுடன் பயணம் செய்வது.தன் மனதில் இருந்த குறைகளையும் ஆன்மீகம் சம்பந்தமாக தனக்கு இருந்த சந்தேகங்களையும் சந்நியாசியிடம் கேட்டுக்கொண்டே வந்ததார். சந்நியாசியும் பொறுமையாக பதிலளித்துக்கொண்டே வந்தார்.


ஒரு திருப்பத்தில் கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. செல்வந்தரோ கடினமான வேலைகள் எதுவும் செய்து பழகாதவர். சந்நியாசி கொஞ்சமும் சங்கோஜ படாமல் அய்யா செல்வந்தரே நீங்கள் இங்கேயே இருங்கள் நான் சென்று பக்கத்தில் யாராவது உதவிக்கு கிடைப்பார்களா? என்று பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு டிக்கியை திறந்து கேனை எடுத்துக்கொண்டு சென்றார்.


அந்த இடமோ ஆள் நடமாட்டமே இல்லாத இடமாக இருந்தது. அடிக்கடி வாகனப்போக்குவரத்தும் அங்கே காணப்படவில்லை.


எப்பொழுதும் தன்னைச் சுற்றி குடும்பம், நண்பர்கள், துதி பாடுபவர்கள் என்றே பழக்கப்பட்டிருந்த செல்வந்தருக்கு முப்பதே நிமிட தனிமை வாழ்வைப்பற்றிய பயத்தைஅவரிடம் ஏற்படுத்தியிருந்தது.


முப்பது நிமிடங்கள் கழித்து வேர்வை வழிய சந்நியாசி எரிபொருளுடன் அந்த இடத்திற்கு வந்தார்.


அவரைப்பார்த்ததும் செல்வந்தர் சாமி என்னால் ஒரு அரை மணி நேரம் யாருமில்லாமல் தனிமையில் இருந்தது மிகவும் கொடுமையாய் இருந்தது.மனதில் தேவையில்லாத கற்பனைகள் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. யாரும் பேச்சு துணைக்கு கூட இல்லாமல்,ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருப்பது இவ்வளவு கடினமானதா? என்று வினவினார்.


புன் சிரிப்புடன் சந்நியாசி, அய்யா செல்வந்தரே உன் தொழிலில் உள்ள சிரமங்களையும், வேலைகளையும் நித்தம் செய்து உங்கள் மனதை பழக்கப்படுத்தியுள்ளீர்கள்.உண்மையில் அந்த வேலைகள்தான் கடினமானவை. ஆனால் உள்முகமாக மனதை திருப்பி தனிமையில் தன்னை உணர்வது நீ செய்து கொண்டிருக்கும் வேலையைவிட கடினமானது அல்ல.


ஆர்வமும் முனைப்பும் இருந்தால் இப்பயிற்சி மிக எளிதாய் வசப்படும் .மேலும் தனிமை இனிமையானதாய் மாறும். உன்னுடைய இந்த பயிற்சி எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைக்கொடுக்கும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனது பாதிக்காது. இடைவிடாது, இடையூறு இல்லாமல் என்றுமே கிடைக்கும் இந்த ஆனந்தமும், மகிழ்ச்சியும் உனக்குள்ளேயே இருக்கிறது.


அதற்கு


தனித்திரு... விழித்திரு.


இதிலிருந்து தெரிந்துகொண்ட விசயம்

கஷ்டமான வேலைகளை எளிதாகச் செய்கிறோம்,எளிதான வேலைகளை கஷ்டமாக்குகிறோம். நம்முள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை வெளியில் தேடுகிறோம்.(இதை பிளாக்கில் பதிவது உட்பட)


நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நண்பர் பாலபாரதி மற்றும் நவக்குமார் ஆகியோர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்த அருமையான தகவலை உணர்வுப்பூர்வமாய் தனக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கங்களுடன் நண்பர் பாலபாரதி கூறினார். நல்ல விசயத்தை மனதில் விதைத்த நண்பருக்கு நன்றி.

பாருங்க.. ரசியுங்கள்.. அடித்தாலும் தப்பில்லை





















Friday, July 25, 2008

திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது...ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும்


திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது
ஆனாலும் நாகல் நகரில் அமைந்துள்ள
சுப்பையர் சத்திரம்
இன்னும் மாறாமல்
பழமையும் தொன்மையும்
ஒருங்கே அமையப்பெற்று
விளங்குகிறது

இந்த சுப்பையர் சத்திரத்திற்கு
ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.
நல்ல ஆன்மீக அதிர்வுகள்
உள்ள இடம்
இந்த சுப்பையர் சத்திரம்.

இந்த இடத்திற்குள் நுழைந்தாலே
நம்மையும் அறியாமல்
அமைதி நம் மனதிற்குள்
குடிகொள்ளும்.

பழமை வாய்ந்த பிள்ளையாரும்
பழங்கால பட்டிய கற்களால்
ஆன திண்ணைகளும்
ஏதோ கதை சொல்லும்
ஒங்கி வளர்ந்த ஆலமரமும்
அதன் தென்றல் காற்றும்
நம்மை தாலாட்டும்.

இந்த பழமையும் பெருமையும்

வாய்ந்த இந்த இடத்தில்தான்
ஆடி ஒன்றாம் தேதி முதல்
இராமாயணச் சொற்பொழிவு
நடைபெற்றது.

கேட்போர் அனைவரையும்
தன் விசய ஞானத்தாலும்
தெய்வீகத்தினாலும்
சுந்தர ராம தீட்சிதர் அவர்கள்
இராமாயண காலத்திற்கே
சென்ற அனுபவத்தை
கிடைக்கச்செய்தார்.

சில துளிகள் இங்கே.

சுமார் 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாம்.

லோகத்துல தசரதன் ராமர் மாதிரி அப்பா பிள்ளைய பாக்குறது ரொம்ப கஷ்டம்.ராமரைப் பார்க்காமல் தசரதனுக்கு தூக்கமே வராதாம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ராமரை தசரதன் அழைத்தாலும் முகம் வாடாமல் தந்தையை ராமன் வணங்கி மரியாதை செய்யும் அழகே தனிதான்.

இந்த காலத்தில் அப்பா ஒரு முறை கூப்பிட்டு இந்த விசயத்தை முடித்துவா என்று கூறினாலே சும்மா சொன்னதையே சொல்லாதீங்கப்பா என்று உதாசீனப்படுத்துபவர்கள் தான் அதிகம். பதவி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இளய மகனுக்கு பதவி கொடுக்கிறேன் என்றால் இந்த காலத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் ராமன் சித்தி கைகேயின் மூலமாக தம்பி பரதனுக்கு பட்டாபிசேகம் என்பதையும், தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டாலும் சிறிதுகூட முகவாட்டமில்லாமல் அன்னையே அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நிலையிலும் தன் தந்தை தசரதரின் உடல் நலக்குறைவே அவரை மிகவும் பாதித்தது.

தனக்கு பட்டாபிசேகம் என்ற விசயத்தை பரதன் கேள்வி பட்டாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,மறுக்கிறார். இது முறையன்று என்று ராமனிடம் மன்றாடுகிறார். ஆனாலும் ராமர், பரதா... தந்தைக்குச்செய்யும் கடமையிலிருந்து தவறாதே என்று தந்தையை மட்டும் நினைத்து கவலைப்படுகிறார்.

என்னே அழகு அந்த காலங்கள், இன்றைக்கு அண்ணன் தம்பிகளிடம் இந்த நிலையைகாணமுடியுமா? அப்பா அண்ணனுக்கு மட்டும் என் 73 செல்லு, எனக்கு 1100வா? இது மட்டுமா... அவனுக்கு அண்ணாநகர்ல பிளாட் எனக்கு அரக்கோணத்திலேயா?உன் வயசுக்கு இப்படி ஒரவஞ்சன பன்னலாமா? என்று தந்தையிடம் கேட்டால் இந்த காலத்தில் அதற்கு பெயர் மரியாதை.

ராமனைத் தேடி பரதன் காட்டிற்கு வந்து எவ்வளவோ அழைத்தும் ராமர் தன் முடிவில்இருந்து மாறவில்லை. முடிவில் பரதன் அண்ணா உன் பாதுகையாவது கொடு என்று ராமரின் பாதுகையை வாங்கி தலை மேல் வைத்துக்கொண்டு நாட்டிற்கு சென்றான்.

ஆயிரம் ராமனுக்குச் சமம் பரதன் என்று வால்மீகி வர்ணிக்கிறார் ஏன்?விட்டுக்கொடுக்கும் குணமும் தர்மம் அறியும் குணமும் முறையே ராமர், பரதனிடம் இருந்துள்ளது.தன் அன்னை கைகேயின் சூழ்ச்சியால் அண்ணன் காட்டிற்குச்செல்கிறார், அதை ராமரும் ஏற்றுக்கொண்டு தம்பிக்கு முடிசூட்ட விட்டுகொடுக்கிறார்.ஆனால் பரதனோ கிடைத்தவரை லாபம் என்று எண்ணவில்லை,அண்ணா இது தர்மம் அல்ல மூத்தவர் நீங்கள்தான் அரசாள வேண்டுமென்று போராடுகிறார். இந்த குணத்திற்காகத்தான் வால்மீகி அவ்வாறு கூறினார்.

இன்னும் ஒரு விசயம்

ஆஞ்சநேயரை ராமர் என்று பார்த்தாரோ அன்றே அவரின் கஷ்டமெல்லாம் கதிரவனைக்கண்ட பனி போல் விலகிவிட்டது.அதனால் தான் நாம் ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த நாளை தொடங்கும் போதும் அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டும்,ஆஞ்சநேயரை மனதில் இருத்திக்கொண்டும் வேலையை தொடங்கினால் ஜெயம் உண்டாகும்.

கூட்டத்தில் உள்ளவர்கள் தன்னை மறந்து சுந்தர்ராமதீட்சதரின் மென்மையான காந்த குரலில் ராமாயணத்தை சுப்பையர் சத்திரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

பல ஆன்மீக பெரியவர்களால் பலமுறை ராமாயணச்சொற்பொழிவை கேட்டிருந்தாலும்சுந்தராம தீட்சதரின் கதை சொல்லும் பாணி அனைத்து தரப்பினரையும் கட்டிபோட்டிருந்தது.

கதைகளின் இடையே கிளைக்கதைகளும், கதைக்கு சம்பந்தமான தற்கால நடைமுறைகளையும் அழகுறச்சொல்லி கேட்பவர் மனங்களை சிந்திக்கச் செய்கிறார்.

எந்த நாட்டிற்கும் வந்து சொற்பொழிவை அழகுற நடத்தி கேட்பவர் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இராமாயணம் சொல்ல சுந்தர்ராம தீட்சதரை அனுகலாம்.
அவரின் அலை பேசி எண்: 9444230084.

ஆரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?

ப்பிள் கிலோ 120ரூபாயாம்
அதுக்கு நீ ஏ கவலப்படுற மச்சான்?
இல்ல அக்காவுக்கு ரொம்ப புடிக்குமேன்னுதா...
போன வாரம் வாங்கன ரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?அக்காவுக்கு சளினாலதான் அத கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதா போச்சு
ஏ தியாகத்த என்னிக்கு நீங்க புரிஞ்சுகிட்டீங்க?
ஒரு அரை கிலோ ப்பிள் போடுங்க.
டேய்ய்ய்ய்ய்ய்......



சார் இந்த 6300 நோக்கியா என்ன விலை?
8000ரூபா
அந்த சோனி எரிக்சன்?
12000ரூபா
புளூடூத்?
இருக்கு.
கேமரா?
அதுவும் இருக்கு.
எம்.பி.3?
இருக்கு சார்
சார் கைமாத்து 1000ரூபா இருக்குமா?
அதுவும் இருக்கு (ஏதோ ஞாபகத்தில்).

பொண்டாட்டிக்கு ரொம்ப பயப்படுவேன் நீங்க?

நா நெனச்சா உன் பிசாத்து பணம் 5000த்த இப்பவேகொடுக்கமுடியும்
அப்ப கொடு
நா நெனச்சாத்தானே!


நா ஏ பொண்டாட்டிக்கு ரொம்ப பயப்படுவேன் நீங்க?
நா ஏ சார் உங்க பொண்டாட்டிக்கு பயப்படனும்.

Wednesday, July 23, 2008

சிங்கிள் டீ குடிக்க வெக்கமா இல்லையா ..

சம்பாரிக்காம சிங்கிள் டீ குடிக்க வெக்கமா இல்லையா உனக்குன்னு எங்கப்பா கேட்டுட்டார்
அப்புறம்?
வேறென்ன ரோசத்துல காபிய குடுச்சுட்டு வந்துட்டேன்.



சிக்கனமா இருந்ததுக்கு ஏ பொண்டாட்டி திட்றா
ஏன்டா?
அவ நெக்லஸ அடகு கடையில வச்சா வட்டி கூடன்னு பேங்ல வெச்சேன்.

ரீசார்ஜ் பண்ணவே முடியலடா மாப்பள..

எங்க வீட்ல கிளி மாதிரி பொண்ணு பாத்திருக்காங்க

ஏ மனுசங்க வீட்ல பொண்ணு கிடைக்கலையா?



ரீசார்ஜ் பண்ணவே முடியலடா மாப்பள

ஏன்டா?

அதுக்கு செல் வேணும்ல.

இன்னிக்கு ஒரு பேச்சு

நான் கொடுத்த 100ரூபாய இன்னிக்காவது கொடு

நாளைக்கு தர்றேன்

நேத்தும் இதேதானே சொன்ன

எனக்கு, இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது
.

ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...


புது விகடன் பளபளப்பாக இருந்த அளவுக்கு விசயம் உள்ளதாக இருக்கிறதா என்றால் ம்ம்ம்ம்... சந்தேகம்தான்.

93ம் பக்கத்தில் சாட்டடேஇரவு இளம் பெண்கள் எந்த எந்தநட்சத்திர விடுதிகளில் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டமாய்இருக்கலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார்கள்.பிரசுரித்திருந்த படங்களும் உண்மையில் நாம் படிப்பதுவிகடன்தானா? என்ற சந்தேகம் எழுந்தது.

யூத் ஸ்பெசல் கேள்வியும் நானே பதிலும் நானே
போன்றவைகள் நன்றாய் இருந்தது.
(அதிலும் அசைவம் ஜாஸ்திதான்).

30 லிருந்து 40 வயதிற்குள் உள்ளவர்களால்குடும்ப பொறுப்புகளினால் வார,மாத பத்திரிக்கைகளைபடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது போல,இளைய தலைமுறையினரும் படிக்கும் பழக்கத்தையேமறந்துவிட்டனர்.

உணர்வுகளை கொட்டியெழுதும் கடிதங்களேஇன்றைய தலைமுறை மட்டுமல்லயாவரும் மறந்த நிலைதான் தற்சமயம் உள்ளது.

என்ன ரமேஷ்?

என்று எடுத்த எடுப்பிலேயே பெயரைச் சொல்லி விடுகிறார்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச சுவாரஷ்யமும்போய்விடுகிறது அலை பேசியில்.

விகடன் முற்றிலும் இளயதலைமுறையினரைசென்றடையவேண்டும் என்ற நோக்கில் லேஅவுட் முதல் விசயங்கள் வரை மாற்றியுள்ளார்கள்.

இன்டர்நெட் யுகத்தில் இருக்கும் இளயதலைமுறையினரைஇந்த புதிய விகடன் கவருமா?நடுத்தர வயதில் உள்ளவர்களையும் தக்கவைத்துக்கொள்ளுமா?

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Saturday, July 19, 2008

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனும்...ஆனந்த விகடனும்...

இவன 2 மணிநேரம் வச்சுக்க முடியுமா?

என்று என் இல்லத்தலைவி கேட்க,

ஏம்மா?

நாங்க ரெண்டு பேரும் சுப்பையர் சத்திரத்தில் சுந்தர ராம தீட்சிதரின் இராமாயண சொற்பொழிவை கேட்க போறோம் என்றனர்.

முடியாது என்று சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதா?

புன்சிரிப்புடன் சரி என்று தலையாட்டினேன்.


திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசன்


அப்பா..பா..பா..
திறந்த வெளியில் கிடைத்த சந்தோசத்தில் என் புத்திரன் தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து ஆனந்த கூச்சலிட்டான்.

அவனின் அளவு கடந்த ஆற்றல் என்னை,
2 மணிநேரம் இவனை எப்படி சமாளிக்கப்போகிறோமோ?
என்று பயம் கொள்ளவைத்தது.

ப்ளாட் பார்ம் டிக்கட் எடுத்துக்கொண்டு 2 வது ப்ளாட் பாரத்தில் பைய நடையைக்கட்டினோம்.

தூத்துக்குடி மைசூர் எக்ஸ்ப்ரஸ் மற்றும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்வரும் நேரமாதலால் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருந்தது.

என் பையனுக்கு தண்டவாளத்தைப் பார்த்ததுமே குஷி வந்துவிட்டது.கூடியிருந்த பயணிகளையும்,அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டே வந்தான்.

இரட்டை மனநிலையில் இவற்றைக் கவனித்துக்கொண்டே
வந்த நான் அங்குள்ள புத்தகநிலையத்தில் அழகுற தொங்கிக்கொண்டிருந்த புது வடிவமைப்பில் உள்ள
ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...

மீதி அடுத்த பதிவில்.

Tuesday, July 15, 2008

பகவான் ஸ்ரீரமண மஹரிஷி பற்றி ரஜினி




ஸ்ரீரமண மஹரிஷி மேல் நடிகர் ரஜினி அவர்களுக்கு ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் உண்டு. நான் யார்? என்னும் கேள்வியை மனதிற்குள் விதைத்து ரஜினியின் மனஅமைதிக்கு வித்திட்டவர்.



வெளிநாட்டில் நடந்த கலை விழாவில் பகவானைப் பற்றி ரஜினி மனம் திறந்து பேசும் ஒரு வீடியோ காட்சி. இதை அழகாக தொகுத்த என் நண்பர் திரு.பாலபாரதிக்கு என்நன்றிகள். .








திருவண்ணாமலை செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் பகவான் ஸ்ரீரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று பாருங்கள், அங்குள்ள அமைதியான சூழ்நிலையும், தெய்வீகப் பாடல்களும், அங்கு நிறைந்திருக்கும் நல்ல அதிர்வுகளும், நம்மைஅமைதிப்படுத்தும் என்பது உண்மை.




http://www.youtube.com/watch?v=5WLI2rcV9Ig

சேரத் தமிழ்...


சேரத் தமிழ் -எர்ணாகுளத்திலிருந்து வெளிவரும் இந்த காலாண்டு தமிழ் இலக்கிய இதழ் மிகவும் அருமையாக உள்ளது. அருமையான தலையங்கம், சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இவ்விதழுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

படைப்புகள்

உயிருள்ளவையாக

இருக்கவேண்டும்

என்பதற்காகக்

குழந்தைகளையா படைப்பது? - இது ஒரு சோறு பதம்.

சமீபத்திய ஜனவரி - மார்ச் 2008 இதழைப் படிக்க நேர்ந்தது. அதில் மு.முரளீதரன் எழுதிய ''பத்தும் ஆறும் பதினேழு'' என்ற கட்டுரை மிக அருமையாக இருந்தது.

அக் கட்டுரையில் ''கடிதம் எழுதும் பழக்கமே காணாமல் போய்விட்டது. உறவையோ நட்பையோ, நேரில் சென்று பார்த்து, பேசிப்பழகி மகிழ்ந்த காலமும் என்றோ மலையேறிவிட்டது'' என்று கடிதம் எழுதும் பழக்கம் மறைந்த சோகத்தை அருமையாக பதிவு செய்திருந்தார்.

இன்னும் சிறு சிறு துணுக்குகள் வெகு அற்புதமாக மேற்படி சேரத்தமிழில் உள்ளது.

இவ்விதழின் ஆசிரியர் திரு.அ.சொ.சிவப்பிரகாசம் தமிழுக்கு தன்னால் ஆன தொண்டை எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார். நேரிய பார்வையும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.


நல்ல தமிழ் எங்கிருந்தாலும் அதை உலகுக்கு எடுத்துச்சொல்ல மிகவும் விரும்புபவர்.


உங்கள் நல்ல படைப்புகளை மின் அஞ்சலில் அவருக்கு அனுப்பிவைத்தால் சிறந்தவற்றை பிரசுரிக்க காத்திருக்கிறார்.
மின் அஞ்சல் முகவரி:
srae@satyam.net.in.

Sunday, July 13, 2008

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில்...


திருச்சி... திருச்சி... திருச்சி... என்று அடித்தொண்டையில் கத்திக்கொண்டிருந்தான் அந்த சொகுசு பஸ்ஸின் ஏஜெண்ட்.

அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு வந்திறங்கிய ஸ்ரீராம் நேரே அந்த ஏஜெண்டிடம் திருச்சிக்கு எவ்வளவுப்பா?

அந்த நிமிடமே கிளம்புவதுபோல் கடந்த ஒரு மணிநேரமாக உறுமிக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஸ்ரீராமைப்பார்த்ததும் ஒரு ஸ்பெசல் உறுமல் உறுமி லேசாக நகர்ந்தது.

என்ன சார் நீங்க... சீக்கிரம் ஏறுங்க 350ரூபா தான் என்று அவசரப்படுத்தினான் ஏஜெண்ட்.

இடியே விழுந்தாலும் சிறிதுகூட பதற்றப்படாத ஸ்ரீராம், கொஞ்சம்கூட முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் இருந்தான்.

பாதி இட்லி உள்ளேயும் மறு பாதி இட்லி வாய்க்கு வெளியேயும் இருந்தபடி பதறிவரும் பயணிகளை ஏமாற்றி அவர்களின் பதற்றத்தையும் அவசரத்தையும் காசாக்கியே பழகிப் போன ஏஜெண்டுக்கு ஸ்ரீராமின் உணர்ச்சி காட்டாத முகத்தைப்பார்த்ததும் பார்ட்டி மிஸ்ஸாயிடுமோ என்ற பயம் கிளம்பியது.

இண்டர்நேசனல் ஏர்ப்போட்டிலேயே ப்ளைட்டில் குத்தாலம் துண்டைப்போட்டு இடம் பிடித்து பக்கதில் உள்ள பிகரிடம் தங்கமணி கடலை மிட்டாயைக்கொடுத்துவிட்டு ஏர்கோஸ்டஸ் பிகருக்கு கொடுத்த பாரின் சாக்லேட்டை அமுக்கியவன் ஸ்ரீராம்.

அதுமட்டுமல்ல லண்டனுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது தேம்ஸ் நதிக்கரையில்ஆப்பம் சுட்டு வித்து ஆயிரம் பவுண்டை அனாவசியமாய் சம்பாதித்தவன். அமெரிக்காவில்நடுரோட்டில் நுங்கு வண்டி ஒட்டி வெள்ளைக்காரிகளை அலற வைத்தவன்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களை டூர் கூட்டிபபோகிறேன் என்று சொல்லி 4000ரூபாய் வசூலித்துவிட்டு நண்பர்கள் நால்வரையும் குதிரை வண்டியில் ஏற்றினான்.


அதில் ஒருவன் சந்தேகத்துடன் ஏம்பபா ஏ.சி வண்டியிலேல கூட்டிப்போறேன என்றதற்கு இன்னொருவன் நல்லா பார்றா நாலாபுறமும் திறந்திருக்குல்ல,ஏதோ இந்த டூர்ல உதைக்கிதே என்றவனை குதிரைப்பக்கத்திலே உக்காந்தா உதைக்காம முத்தமா குடுக்கும் என்றான். சலனமே இல்லாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீராம் இறங்குங்க இறங்குங்க ஸ்பாட் வந்திருச்சு என்றான்.

முதலில் குதிரை வண்டியிலிருந்து குதித்த ஒருவன் சடாரென்று மயங்கி விழுந்தான் அவனின் 95கிலோ எடை அடுத்து குதித்தவனின் காலைப்பதம் பார்க்க அந்த ஏரியாவே குலுங்க முருகா என்று அலறினான்.


மயங்கி விழுந்தவன் லேசாக திரும்பி அங்கதாண்டா வந்திருக்கோம் என்றான். குதிரை வண்டியின் முன்னால் உட்கார்ந்திருந்தவன் லேசாக எம்பிப்பார்த்தான், பார்த்த வேகத்திலே உள்ளே இருந்தவனிடம் உச்சஸ்தனியில் மாப்ளேளள...இது திருப்பறங்குன்றம்டா.. அவன் கத்திய வேகத்தில் குதிரை பயத்தில் மிரண்டு பஞ்சாய்ப்பறந்தது.

அதுவரையில் தெழுங்கு படத்தில் மட்டுமே ஸேஸ் சீன்களைப் பார்த்துப்பழகிய அவர்களுக்கு நிஜத்தில் நடக்கும் இந்த ரேசால் அவர்கள் இதயம் லப் டப் லப் டப் என்று உதறியது.


அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு குதிரை பக்கத்தில் உள்ள பாத்திரக்கடையில் அவர்களை தள்ளியது.

இப்படியாக திருப்பறங்குன்றத்திற்கு டூர் கூட்டிசென்று வாழைப்பழமும் தேங்காயும் வாங்கிக்கொடுத்துவிட்டு இந்தாங்கடா டூர் செலவு போக மீதி 2.50பைசா என்றவனை கடுப்புடன் இது உனக்கே நல்லாயிருக்கா? என்றவனிடம் என்னபண்றது குதிரை வண்டிக்கு வாடகை 250ரூபா தான்.. ஆனா குதிரைக்கு வைத்தியத்திற்கும்,வண்டி ரிப்பேர் செலவுக்கும் 3737.50பைசா ஆயிருச்சு என்று சொல்லிவிட்டு, இதற்கு பிராயசித்தமா அடுத்த மாசம் உங்க எல்லாரையும் குற்றாலம் கூட்டிட்டு போறேன் என்றதைக்கேட்டதும், அலறி ஒட்டம் பிடித்தனர்.

சார்ர்.. ஏர்ரீங்களா இல்லையா? என்ற ஏஜெண்டிடம் 50ரூபாதானப்பா திருச்சிக்கு

என்ன சார் நீங்க... படிச்சவர் நீங்களே இப்படி பேசினா எப்படி சார்... என்று இழுத்தான்.

இது சீசனே இல்லாத டைம், எப்படியும் பத்து பேர்தான் உள்ள இருக்காங்க, நா வர்றதால உங்களுக்கு லாபம்தான் என்ன சொல்ற என்றான்.

அப்படி இப்படிப் பேசி முடிவில் 100ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.
சந்தோசமாய் பஸ்ஸின் உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்து அருகே திரும்பிப்பார்த்தான், டேய் சந்தோஷ் என்று மகிழ்ச்சியாய் கத்தினான். 95கிலோ எடையுள்ள சந்தோஷ்சும் டேய் மச்சான் எப்டிடா இருக்க என்று பல கதைகள் பேசி மகிழ்ந்தனர்.

திருச்சிக்கு எவ்வளவு ரூபாடா கொடுத்த என்ற ஸ்ரீராமிடம் 350ரூபா தான் கொடுத்தேன் என்றான் சந்தோஷ்.
ஏமாந்துட்டியேடா மச்சான் நான் 100ரூபா தான் கொடுத்தேன்,


அதற்கு பிறகு ஸ்ரீராம் பேசிய எந்த வார்த்தையும் சந்தோஷ்ற்கு கேட்கவே இல்லை.

முன் சீட்டில் உள்ள ஒருவர் ஆஆஆ...என்று அலறினார் காரணம் அவர் 450ரூபா கொடுத்ததினால் என்ற விசயம் இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

Monday, July 7, 2008

சொல்லாத அன்பு


'இனி உங்களோட எனக்கு பேச்சுவார்த்தையே கிடையாது' 'அப்படி ஒன்றும் நாங்களும் வெக்கங்கெட்டுப்போகல உன்னோட பேசுறதுக்கு'இப்படி நம் குடுபங்களில் அம்மா-பெண், அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி என்று ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வருவது சகஜம். யார் முதலில் இறங்கிப்பேசுவது என்ற ஈகோவினால், தலைமுறைத் தலைமுறையாகப் பேசாமலே போய்விட்ட குடும்பங்கள் எத்தனையோ?


கோபப்பட்டு பேசுவதோ, உணர்ச்சிவசப்பட்டு பேசுவதோ தப்பல்ல,னால் அதற்குபின் சிறிதே சிந்தித்து கொஞ்சம் இறங்கிப்பேசினால் எவ்வளவோ விசயங்களை சாதிக்கலாம். 'நான்' என்னும் அகங்காரம்உறவுகளை சின்னாபின்னமாக்குகிறது. இந்த 'நான்' னால் எத்தனையோ குடும்பங்கள் கோர்ட் வளாகங்களில் சிதைந்து போகின்றன.

'என்ன லதா உன் பையன் அமெரிக்கா போயிட்டானாம்ல உனக்கென்ன பணத்துக்கு பிக்கலா பிடுங்கலா?' என்று மறைமுகமாய் ஏகப்பெருமூச்சுவிடும் தன் தங்கையை,ஏண்டி நீ அவனப் பார்த்துகிட்டமாதிரி நா கூட பாத்துக்கல, ரா பகலா கண்ணுமுழிச்சு சின்ன வயசுல அவனுக்கு வேண்டியதை நீதான் செஞ்ச அவன் இன்னிக்கு இந்த நிலமைக்கு வந்திருக்கான்னா அதுக்கு நீதான் காரணம். நீ இல்லாம ஒரு வளர்ச்சி கண்டிப்பா சாத்தியமில்லை'. என்று லதா சொல்லியிருந்தால் பிரச்சனைக்கே வாய்ப்பில்லை.


தன் இன்னொரு தங்கையிடம் லதா,'என் மகன் அமெரிக்கா போறதுக்கு இவ வயிறு எரியறா பணம் மட்டும் இருந்தா போதுமா?. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த 2 நாளா, எழுந்திருக்க முடியாம வைரஸ் காய்ச்சல்ல விழுந்திட்டான்'. இந்த விசயம் சரியான புரிந்துகொள்ளும் தன்மையோ பக்குவமாக எடுத்துச்சொல்லும் தன்மையோ இல்லாத காரணத்தினால் விசயம் பெரிதாகி, இப்பொழுது இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லை.


இந்த விசயம் முடிந்த பிறகு யாராவது ஒருவர் இறங்கிப் பேசியிருந்தால் அந்தக் குடும்பம் மிகச் சந்தோசமாக இருந்திருக்கும்.


ஒருவர் மேல் நீங்கள் அன்பை வைத்திருந்தால் அதை மூடிவைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.சொல்லாத அன்பு அப்பா-மகனாக இருந்தாலும், கணவன்-மனைவியாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் தெரியாமலேயே போய் அந்த அன்பு உணரப்படாமலேயே முடிந்துவிடும். எங்கு இல்லைபிரச்சனை?.


எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும் அதைஎதிர்கொள்ளவேண்டும். நெருங்கிய சொந்தங்களில் கோபம் வந்தாலும் வெளிப்படுத்துவதும் தப்பில்லை.ஆனால் அதன்பின் சிந்தித்து சிறிதே இறங்கிப்பேசினால் அவர்கள் தங்கள் தப்பை கண்டிப்பாய் உணர்வார்கள். சொந்தமும் உயிர் பிழைக்கும்.


நம்முடைய வாழ்நாள் 100 வயது என்று கொண்டாலும் 36500 நாட்கள் மட்டுமே, ஒருவரின் வயது இப்பொழுது 30 என்று கொண்டாலும் 10950 நாட்கள் சென்றுவிட்டது. மீதம் 25550 நாட்கள்தான். இந்த குறுகிய வாழ்க்கையில் எவ்வளவுக்கெவ்வளவு அன்பை விதைக்க முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு விதைத்து விடுவோம். வாழ்வில் சுற்றம் மற்றும் நட்புடன் மகிழ்ச்சியாய் களிப்போம்.'நான்' என்ற அகந்தையை அழிப்போம்.


''அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு''


எனும் குறள் வழி வாழ்வோம்.

சின்ன சின்ன சந்தோஷங்கள்


கூகுல் சர்ச்சில் ராஜா சொக்கலிங்கம் பிளாக்கர்ஸ் என்று போட்டதில் 'ஹலோ சவுக்கியமா' என்று ஒரு டைட்டில் கிடைத்தது. ஆர்வமுடன் அதை சொடுக்கியதில் கெளரி சங்கர் என்ற எதார்த்த இளஞனின் வலைப்பதிவு படிக்க நேர்ந்தது. மிகச் சிறப்பாக எண்ணங்களை வெகு அழகாக எளிய நடையில் பதித்திருந்தார் அந்த இளஞர்.அலட்டல் இல்லாமல் அட்டகாசமாய் எழுதும் கெளரி சங்கரின் கலைத்திறமை வளர வாழ்த்துகிறேன்.

சும்மா இருக்க முடியாமல் என் பாட்டியின் பேச்சை எப்பொழுதோ செல்லில் பதிவு செய்து வைத்திருந்ததை என் பாட்டியின் மறைவுக்குப்பின் கேட்டபொழுது அவர்களின் குரல் என்னை என்னவோ செய்தது.என் பாட்டியின் பேச்சை என் சித்திபையன் சக்திக்கும், மாமாபையன் வள்ளியப்பனுக்கும் மெயிலில் அனுப்பிவைத்தேன். திடீரென்று ஒரு நாள் ஆர்குட்டில் அழைத்த போது ஸ்கிராப் ப்றம் சக்தி என்று வந்ததை கிளிக் செய்தேன். என் தம்பி சக்தியின் குறுஞ்செய்தி என் மனதெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தைப் பரப்பியது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில்தான் எவ்வளவு சந்தோசம்.19:03:08 புதன்கிழமை அன்று ஒரு கேஸ் விசயமாக நீதிமன்றத்தில் நின்றிருந்தேன். தொடர்ந்து என் அழைப்பேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. காரணம் அன்று ஜனசக்தி தினசரிப்பேப்பரில் நாங்கள் தயாரித்த "தி வேரியபிள்ஸ்" என்ற குறும்படத்தின் விமர்சனம் வந்திருந்ததுதான்.குறிப்பாக என்னுடைய மகிழ்ச்சிக்குகாரணம் அந்தப் படத்தை இயக்கிய கார்த்திகேய மணிகண்டனைப் பராட்டி எழுதியதுதான். மிகச்சைறப்பான இளஞர். உலகத் திரைப்படங்களை அவர் அலசும் விதமும்,ஸ்கிரிப்ட் எழுதும் நேர்த்தியும் வியக்கத்தக்கன. கண்டிப்பாய்த் திரையுலகில் நல்ல இயக்குனராய் முத்திரைப்பதிப்பார்.

கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை எத்தனை இளஞர்கள் இந்த உலகத்தில் சாதிக்க காத்திருக்கிறார்களோ?