Thursday, August 16, 2007

வருங்கால சாதனையாளர்கள்


என் ஜன்னல் பெருமையோடு அறிமுகப்படுத்துகிறது.

ராமச்சந்திரன். திண்டுக்கலைச் சேர்ந்த இவர் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம். வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விசயங்களை அழகுணர்ச்சியுடன் குறும்படமாக்குவதில் வல்லவர். இவரின் கைவண்ணத்தால் திண்டுக்கலைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன. திரைப்படத்துறையிலும் முத்திரைப் பதிக்க பிள்ளையார் சுழியாக நடிகர் விஜய் மற்றும் ஸ்ரீகாந்திடம் கதை சொல்லி பாராட்டுகளை வாங்கியுள்ளார், இவரின் குறும்படங்களை இனி வரும் பதிப்புகளில் காணலாம்.

கார்த்திக் மணிகண்டன்

B.E. படிப்பை இவர் 8 - என்ற குறும்படத்தை வெகு அழகாக எட்டே நிமிடத்தில் எடுத்திருந்தார்.

மேலும் சமீபத்தில் கூhந ஏயசயைடெநள என்னும் 23 நிமிடம் ஓடும் குறும்படத்தை எடுத்து அனைவரின் பாராட்டுகளையும் கல்லுரியில் பெற்றhர்.

உலகத் தரத்தில் தமிழ் திரைப்படத்தை தரவல்ல ஒரு இளைஞனாக இவர் உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

சின்ன சின்ன செய்திகள்

* சென்னை தி, நகரில் உள்ள போத்தீஸ்க்கு எதிர்புரத்தில் தள்ளுவண்டியில் ஒரு அன்பர் சாத்துக்குடி ஜPஸை கனஜோராக விற்றுக் கொண்டிருந்தார், அரைமணி நேரத்தில் சுமார் 30 நபருக்கு அவர் ஜPஸ் போட்டுக் கொடுத்த லாகவமே தனி ஸ்டைல்.

ஜPஸ் சாப்பிட்ட ஒருவர் தன் நண்பரிடம். இங்க பாருய்யா இந்த ஏரியாவுல ஒரு இடம் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம். போத்தீஸ,் சென்னை சில்க்ஸ் மாதிரி பெரிய முதலீடு இல்லாம எவ்வளவு ஈஸியா சம்பாதிக்கிறhர் பாரு என்றhர்.

உண்மைதான் அரை மணிநேரத்தில் 300 ரூபாய் சம்பதித்த அவர் ஒரு நாளைக்கு எப்படியும் செலவு போக ரூ.2.000 சம்பாதிப்பது உறுதி, மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது இதுதானோ?

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது உண்மைதான், 500. 1000-த்திற்கு வாங்கும் தன்னம்பிக்கை புத்தகத்தைப் படிப்பதை விட ஒரு எட்டு இவரை மாறி உள்ளவர்களைப் பார்த்தாலே போதும். வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு என்பதை அறிந்து கொள்ளலாம்.

* காத்திருந்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் இப்பொழுது குறைந்து கொண்டு வருகிறது, மேலும். காசு கொடுத்து உணவு விடுதிகளில் சாப்பிடச் செல்லும் பொழுது சிறிது நேரமானால் கோபம் தலைக்கேறிவிடும் இந்தக் காலத்தில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசன் சாலையில் உள்ள சுமார் 60 வருடப் பழமையான நியூ எசன்ஸ் காபி கிளப்பில் பொருத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறhர்கள்.

இத்தனைக்கும் அந்த உணவு விடுதியை கணேச அய்யர் என்ற ஒருவரே சமையல் வேலையும் கவனித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் வேலையையும் கவனிக்கிறhர் என்பதை அங்கு வருபவர்கள் ஆச்சர்யத்துடன் பார்கிறhர்கள்
,

1 comments:

said...

ரொம்ப நல்ல ஊக்கமளிக்கும் பதிவு. முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு டானிக்.