Monday, February 1, 2010

சித்தர் பூமி திண்டுக்கல்லில் பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்குஒரு ஆஸ்ரமம்....








திண்டுக்கல்
சித்தர்களும்,
ஞானிகளும் வாழும் பூமி.
இந்த திண்டுக்கல்லில் ஞானிகளும் வணங்கும்பெருமை பெற்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி

1890ம் ஆண்டு தனது 11ம் வயதில் 1வருடம்
இங்குள்ள
நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
படித்தது
திண்டுக்கல்லுக்கு பெருமை.

அந்த நாளில் மாலை வேளைகளில்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி
பத்மகிரி மலையைச் சுற்றி
ஆடிப்பாடி விளையாடி உள்ளார்.

திண்டுக்கல் கோவில் தெருவில்
அவருடைய உறவினர் வீட்டில் வசிக்கும் போதுஅடிக்கடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

சிலசமயங்களில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பஉறவினர்கள் நையப்புடைந்தும் உள்ளனர்.

ஊமைத்துரை சுரங்கப் பாதையில் நண்பர்களுடன்
விளையாண்ட அனுபவத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷி பின்னாளில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும்போது
திண்டுக்கல்லில் இருந்து வரும் அன்பர்களிடம் பகிர்ந்துகொள்வாராம்.

யூதர்கள்
உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளியாக
அறியப்படுபவர்கள் யூதர்கள்.
ஏன்,எதற்கு,எப்படி?என்று கேள்விகளால்
துளைக்கும்
யூதர்களே
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்
நான் யார்?தத்துவத்தில் மனம் அடங்கி
பகவானை கொண்டாடுகின்றனர்.

பகவான் பிறந்த இடம்
திருச்சுழி
பகவான் வாழ்ந்த இடம்
மதுரை
அடங்கிய இடம்
திருவண்ணாமலை
இந்த மூன்று இடங்களையும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்
வந்து பார்த்து தரிசித்து
தங்கி செல்லும்படிஆசிரமங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி
வாழ்ந்து
படித்து
விளையாடிய
சிறுமலை சூழ்ந்த திண்டுக்கல்லிலும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்வந்து பார்த்து தரிசித்து தங்கி செல்லும்படி
ஒரு ஆசிரமம் அமைக்கும் பணியைபகவான் அருளால் தொடங்கி உள்ளோம்.

2009ம் வருடம் பிப்ரவரி மாதம் 1ம் தேதிஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்குபகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளிய ஸ்ரீஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக அன்பர் இல்லத்தில்நடைபெற்றது.

அதன் பிறகு பிரதி வாரம் ஞாயிற்று கிழமைதோறும்
அன்பர்கள் இல்லத்திலும்
திருக்கோவில்களிலும்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளியஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக தொடர்ந்து பகவான்அருளால் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாத கார்த்திகை நாள் அன்றும்இல்லாத ஏழை எளியவர்களுக்குஅன்னதானம் பகவான் ஸ்ரீரமண மகரிஷிஅருளால் வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்நல்ல விசயங்களை போதிப்பதற்காகவும்ஸ்லோகங்களை கற்றுக்கொடுக்கவும் ஸ்ரீரமணாச்சல குருகுலத்தை பகவான்அருளால் நடத்தி வருகின்றோம்.

உலகமெங்கும் உள்ள
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்அடியார்களின்
அன்பும், ஒத்துழைப்பும் இருந்தால்
மிகச்சிறப்பாய்
திண்டுக்கல் ஸ்ரீரமணாச்சல ஆஸ்ரமம் அமையும் என்பது திண்ணம்.

அருணாச்சலம் வாழி, அன்பர்களும் வாழி
அட்சரமணமாலை வாழி.




0 comments: